நெட்டிசன் வேண்டுகோள்

தமிழ்நாடு அரசு கவனத்துக்கு

சென்னை அடையாறு போக்குவரத்து காவல் நிலைய தலைமைக் காவலர், திரு. A.புருஷோத்தமன். 2000, 2001 (ம) 2004 தொடங்கி, 2008 – ம் ஆண்டு வரை ஐந்து ஆண்டுகளும்; 2018ம் ஆண்டும் என மொத்தம் 8 ஆண்டுகள்; “மிஸ்டர் தமிழ்நாடு” பட்டம் வென்றவர். உஸ்பெஸ்கிஸ்தானில் நடைபெற உள்ள உலக ஆணழகன் போட்டிக்கான தகுதித் தேர்வில் (பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் 29.08.2021 அன்று நடந்தது) புருசோத்தமன் தேர்வாகியுள்ளார்.

தமிழ்நாடு காவல்துறையிலிருந்து உலக ஆணழகன் போட்டிக்குத் தேர்வாகியுள்ள முதல் தலைமைக் காவலர் புருஷோத்தமன். 2021 அக்டோபர் 1 முதல் 7 வரை உஸ்பெஸ்கிஸ்தான் நாட்டில் உலக ஆணழகன் போட்டி நடக்கிறது. GPF (அ) சம்பளப் பணத்தில் சேமித்த பணத்தைக் கொண்டே இதுவரை ஆணழகன் போட்டிகளில் புருசோத்தமன் கலந்து கொண்டுள்ளார்.

உலக ஆணழகன் போட்டிக்குச் சென்று வர விமான டிக்கட், தங்குமிடம், உணவு போன்ற அடிப்படைத் தேவைக்கே குறைந்தது; இரண்டு லட்ச ரூபாய் செலவாகும் என்பதே யதார்த்தம். இதுபோன்ற செலவினங்களுக்கு (?!) ஒன்றிய அரசு எந்த நிதியுதவியும் அளிக்காது என்று ஒன்றிய அரசின் விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டுத் துறை ஏற்கனவே தெளிவாகத் தெரிவித்துள்ளதை இங்கே சுட்டிக் காட்டுதல் நல்லது!

தமிழ்நாடு காவல்துறையில் பணிபுரியும் “அனைத்து பேட்ச் காவலர்களின் வாட்சப் குழு” வினர், இதுவரையில் ஒரு லட்ச ரூபாய் வரை வசூல் செய்து நிதியுதவி அளித்துள்ளனர். “உலக ஆணழகனுக்கான சாம்பியன் விருது” பெற்ற பின், ‘புருசோத்தமன்’ களுக்கு; கோடிகளில் பரிசு – பணம் கொண்டு வந்து கொட்ட பலர் காத்திருக்கக் கூடும்; உதவி இப்போது தானே தேவை; இப்போது கிட்டாத உதவி, பின் எப்போது கிட்டினால் என்ன; கிட்டாமல் போனால்தான் என்ன?

நெட்டிசன் : Na Bha Sethuraman Sethu முகநூல் பதிவு