புதுக்கோட்டை

மிழக நீதிமன்ற பணியாளர் நியமனத்துக்கு பரிந்துரை கடிதம் கேட்டு தம்மை அணுக வேண்டாம் என தமிழக சட்ட அமைச்சர் ரகுபதி வீட்டு வாசலில் அறிவிப்பு ஒட்டி உள்ளார்

கடந்த மாதம் தமிழகத்தில்  உள்ள கீழமை நீதிமன்றங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், நகல் பிரிவு அலுவலர், சுகாதாரப் பணியாளர், துப்புரவுப் பணியாளர், தூய்மைப் பணியாளர், தோட்டக்காரர், தண்ணீர் ஊற்றுபவர், காவலாளி, மசால்ஜி போன்ற பணியிடங்களுக்கு 3,557 பேரை தேர்வு செய்வதற்கு  தமிழகம் முழுவதும் எழுத்துத் தேர்வு நடைபெற்றது.

ரகுபதி

 

இந்த பணிகளுக்குக் குறைந்தது 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பதால் ஆயிரக்கணக்கானோர் இத்தேர்வை எழுதினர்.  புதுக்கோட்டையை சேர்ந்த மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதியிடம் பரிந்துரைக் கடிதம் பெற்று, அரசுப் பணியிடத்தைப் பெறுவதற்கு நேரடியாகவும், கட்சி பிரமுகர்கள் வழியாகவும் பலர் முயற்சி செய்து வருவதாகக் கூறப்படுகிறது.

தேர்வுக் குழுவினர் அமைச்சர் ரகுபதியிடம் ”இது போன்று யாருக்கும் பரிந்துரைக் கடிதம் தரவேண்டாம்’’ என்று கூறியதாகத் தெரிகிறது. இதையொட்டி புதுக்கோட்டை கிழக்கு 2-ம் வீதியில் உள்ள அவரது வீட்டின் முன்பு ஒட்டப்பட்ட அறிவிப்பில், ‘‘உயர்நீதிமன்ற வேலை குறித்து அமைச்சரைச் சந்திக்க யாரும் அணுக வேண்டாம். அப்பணி முழுமையாக உயர்நீதிமன்ற கட்டுப்பாட்டில் நடைபெறுகிறது’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.