சென்னை:

நீட் தேர்வு தமிழகத்திற்கு தேவையில்லாதது என தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு பெற மாநில அரசு முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

நீட் தேர்வு தோல்வியால் மாணவர்கள் இருவர் தற்கொலை செய்து கொண்டிருப்பது வேதனை அளிப்பதாகவும், மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் சவால்களை எதிர்கொள்ள வேண்டும்.

ராஜீவ் கொலை குற்றவாளிகள் 7 பேர் விடுதலை விவகாரத்தில், ஆளுநர் உரிய முடிவு எடுப்பார் என்ற நம்பிக்கை தங்களுக்கு உள்ளதாகவும்  தெரிவித்தார்.