சென்னை:

டப்பு கல்வி ஆண்டில் நீட், ஜேஇஇ போன்ற தேசிய தேர்வுக்காக  தமிழக அரசு வழங்கும் இலவச பயிற்சி பெற தகுதி தேர்வு நடத்தப்படும் என்றும், அதில் தேர்ச்சி பெற்றவர்களே நீட் பயிற்சி பெற முடியும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மருத்துவக்கல்வி படிக்க நாடு முழுவதும் நீட் எனப்படும் தகுதித்தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வை எதிர்கொள்ளும் வகையில், தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு கடந்த 2017ம் ஆண்டு முதல் இலவச  நீட் பயிற்சி உள்பட பல்வேறு தேசிய தேர்வுக்கான பயிற்சிகள் அளித்து வருகிறது.

மாநிலம் முழுவதும் வட்டாரத்துக்கு ஒன்று வீதம் 412 மையங்களில், ‘ஸ்பீடு’ என்ற தனியார் பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து இந்த முயற்சியை கல்வித் துறை மேற்கொண்டு வருகிறது.

ஆனால், அரசு அளிக்கும் இலவச பயிற்சியில் படித்து தேர்வில் பாசாகும் சிலரும், மருத்துவப் படிப்பில் சேருவதற்கு போதிய மதிப்பெண் பெற முடியாததால், அவர்கள் மருத்துவம் படிப்பு காணல் நீராகவே நீடித்து வருகிறது.

கடந்த ஆண்டு மாநிலம் முழுவதும் 412 மையங்களில் 19,355 மாணவர்களுக்கு நீட் பயிற்சி அளிக்கப்பட்டது. நடப்பு ஆண்டில் தமிழக அரசு  வழங்கும் இலவச நீட் பயிற்சியில் படித்த ஒருவர் கூட மருத்துவம் படிக்க தேர்வாகாத நிலையில், இலவச நீட் பயிற்சியில் சேரவும் தகுதி தேர்வு நடத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அனைத்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

முதல் கட்டமாக பயிற்சி மையங்களின் எண்ணிக்கை 412-ல் இருந்து 506 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தொடர்ந்து அரசின் இலவச பயிற்சிக்கு தகுதியானவர்களை தேர்வு செய்வதற்காக தகுதித்தேர்வு நடத்தப்பட உள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் உள்ளதாவது

நீட், ஜேஇஇ பயிற்சி வகுப்பு களுக்கு தேர்வான மாணவர் களுக்கு ஆகஸ்ட் 7-ம் தேதி அவரவர் பள்ளிகளில் தகுதித்தேர்வு நடத்தப்பட வேண்டும். தேர்வுக்கான வினாக்கள் விடைக்குறிப்புடன் முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

தகுதித்தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண் விவரங்களை ஆகஸ்ட் 12-க்குள் dsejdv@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

தொடர்ந்து மாணவர்களை திறம்பட தயார் செய்யும் பொருட்டு ஆகஸ்ட் 9-ம் தேதி முதல் வாரந் தோறும் வெள்ளிக்கிழமை குறுந் தேர்வு நடத்தப்படும்.

இதற்கான வினாத்தாள், விடைக்குறிப்புகள் முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு மின்னஞ்சலில் அனுப்பப்படும். அவர்கள் சம்பந்தபட்ட பள்ளி களுக்கு மின்னஞ்சல் மூலம் வினாத் தாள்களை அனுப்ப வேண்டும்.

குறுந்தேர்வுகளை மாணவர்கள் அவரவர் பள்ளிகளிலேயே எழுதலாம். நடப்பு கல்வி ஆண்டில் அதிக மாணவர்களை போட்டித் தேர்வுகளுக்கு தயார் செய்யும் வகையில் குறுந்தேர்வுகள் நடத் தப்படுகின்றன.  இதுகுறித்த அறி வுறுத்தல்களை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன் மைக் கல்வி அதிகாரிகள் வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அரசின் பயிற்சிக்கு தகுதியற்ற மாணவர்கள் அதிக அளவில் வந்துவிடுவதால் அதன் நோக்கம் சிதைபட்டு வருவதாகவும், திறமையுள்ள மாண வர்களைத் தேர்வுசெய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால், நீட் பயிற்சிக்கு தகுதித்தேர்வு வைத்துள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

பள்ளிக்கல்வித்துறையின் இந்த அறிவிப்பு சர்ச்சையை கிளப்பி உள்ளது. தமிகம் முழுவதும் பல்வேறு பள்ளிகளில்  ஆகஸ்டு 7-ம் தேதி பருவத்தேர்வுகள் நடைபெற இருப்பதால், நீட் பயிற்சிக்கு எப்படி மாணவர்களை தேர்வு என்படிதல், ஆசிரியர்கள் இடையே குழப்பம் ஏற்பட்டு உள்ளது. மேலும்,  எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென அறிவிப்பு வெளியிடப்பட்டதற்கு கண்டனங்களும் குவிந்து வருகின்றன.