நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி தங்களது இரட்டைக் குழந்தைகளுக்கு “உயிர் ருத்ரோநீல் என் சிவன், உலக் தெய்விக் என் சிவன்” எனப் பெயர் வைத்துள்ளனர்.

நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி திருமணம் 2022 ஜூன் 9 ம் தேதி மகாபலிபுரத்தில் திருவிழா போல் நடைபெற்றது. இதனையடுத்து அக்டோபர் 9 ம் தேதி தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்திருப்பதாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினர்.

கல்யாணமாகி நான்கு மாதத்தில் குழந்தையா ? என்று கேள்விஎழுந்த நிலையில் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றதாக விளக்கமளித்தனர்.

வாடகைத் தாய் சட்டத்தைக் காட்டி பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து குடும்பநல துறை விக்கித்து நின்றதைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் மகாபலிபுரத்தில் திருவிழா போல் நடைபெற்ற திருமணம் ஊரறிய நடைபெற்ற ஒரு நிகழ்வு என்றும் தாங்கள் ஏற்கனவே பதிவு திருமணம் செய்துகொண்டதாகக் கூறி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.

இந்த நிலையில் தங்களது இரட்டை ஆண் குழந்தைகளுக்கு “உயிர் ருத்ரோநீல் என் சிவன், உலக் தெய்விக் என் சிவன்” எனப் பெயர் வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.