https://twitter.com/Milind_Rau/status/1184823199034310659

விக்னேஷ் சிவன் தயாரிப்பில் மிலந்த் ராவ் இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் படம் ‘நெற்றிக்கண்’.

மர்மங்கள் நிறைந்த த்ரில்லர் படமாக உருவாகும் இப்படத்தில் நாய் ஒன்று முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளது.

த்ரில், சஸ்பென்ஸ் மற்றும் விறுவிறுப்பான கதை அம்சம் கொண்ட இந்த படத்தில் நயன்தாரா இதுவரை நடித்திராத ஒரு கேரக்டரில் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த படத்தில் நயன்தாரா பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக நடித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியிருப்பதாக இயக்குனர் மிலந்த் ராவ் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.