சென்னை: பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நடிகர் சங்க தேர்தல் வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் 23ம் தேதி நடிகர் சங்க தேர்தல் நடைபெற்றது. நாசர் தலைமையில் ஒரு அணியும், பாக்யராஜ் தலைமையில் ஒரு அணியும் தேர்தலை சந்தித்தனர்.

பதிவான வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டது. இது தொடர்பாக தொடர்பாக விஷால், மற்றும் சங்க உறுப்பினர்கள் வழக்கு தொடர்ந்து இருந்தனர்.

நடத்தப்பட்ட தேர்தல் செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்றும் வழக்கில் கோரி இருந்தனர். நடிகர் சங்கத்திற்கு தனி அதிகாரி நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர்கள் கார்த்தி , நாசர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்கப்படுகிறது. இதனையடுத்து நிறுத்தி வைக்கப்பட்ட நடிகர் சங்க தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுமா என்பது தெரிய வரும்.