பிக் பாஸ் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை மிக பிரம்மாண்டமாக தொடங்கியது. விஜய் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10:00 மணிக்கும் சனி மற்றும் ஞாயிறுகளில் இரவு 9:30 மணிக்கும் ஒளிபரப்பாகிற பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி இம்முறையும் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து வருகிறது. அதில் மொத்தம் 18 போட்டியாளர்கள் உள்ளே நுழைந்தனர்.

1. மதுமிதா (ஆடை வடிவமைப்பாளர்)
2. இசைவாணி (கானா பாடகி)
3. அபிஷேக் (விமர்சகர்)
4. ராஜு ஜெயமோகன் (சீரியல் நடிகர்)
5. பிரியங்கா தேஷ்பாண்டே (தொகுப்பாளினி)
6. அபினய் வட்டி (நடிகர்)
7. சின்னப்பொண்ணு (நாட்டுப்புற பாடகி)
8. பவானி ரெட்டி (சீரியல் நடிகை)
9. நாடியா சாங் (மலேஷியாவை சேர்ந்த மாடல் அழகி)
10. இமான் அண்ணாச்சி (நகைச்சுவை நடிகர்)
11. வருண் (நடிகர்)
12. ஐக்கி பெரி (ராப் பாடகி)
13. அக்‌ஷரா ரெட்டி (மாடல் அழகி)
14. நிரூப் நந்தகுமார் (நடிகர்)
15. நமீதா மாரிமுத்து (மாடல் அழகி)
16. சிபி சந்திரன் (மாஸ்டர் பட நடிகர்)
17. சுருதி ஜெயதேவன் (மாடல் அழகி)
18. தாமரைச் செல்வி (நாடக கலைஞர்)

பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியின் முக்கிய போட்டியாளராக எதிர்பார்க்கப்பட்ட நமீதா திடீரென பிக்பாஸில் இருந்து வெளியேறி விட்டார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நமிதா மாரிமுத்து முதல் வாரத்திலேயே திடீரென வெளியேறியது ஏமாற்றமாக அமைந்தது. 2-வது வாரத்தின் முதல் நாளே பிக்பாஸ் வீட்டின் முதல் கேப்டன் தேர்வுக்கான போட்டி மற்றும் நாமினேஷன் ப்ராசஸ் நடைபெற்றது. இதில் பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியின் முதல் கேப்டனாக தாமரைச்செல்வி தேர்வு செய்யப்பட்டார். நாமினேஷன் ப்ராசஸ்-ல் தாமரைச்செல்வி மற்றும் பாவனியை தவிர மற்ற அனைத்து ஹவுஸ் மேட்களும் எவிக்சனுக்கு நாமினேட் செய்யப்பட்டார்கள்.

நேற்று இரவு ஒளிப்பரப்பான எபிசோடு வரை இசைவாணி, சின்னப்பொண்ணு, இமான், பாவ்னி, ஐக்கி, மதுமிதா, ஸ்ருதி, நமீதா என 17 போட்டியாளர்களும் கதை சொல்லி முடித்துவிட்டனர்.

வார இறுதியான இன்று கமல்ஹாசனுடன் போட்டியாளர்களுடன் கலந்துரையாடும் எபிசோடு ஒளிப்பரப்பாகும். இந்த 2 நாட்களில் 17 போட்டியாளர்களில் ஒருவர் வீட்டை விட்டு வெளியேறுவார்.

முதல் ப்ரோமோ : ப்ரோமோவில், நேற்று காப்பாற்றப்பட்டவர்கள் போக மீதமிருக்கும் 5 பேர் நாமினேஷனில் இருக்கிறார்கள். அப்போது பேசும் கமல், “ஐவர்… எஸ்… எஸ்… இதிலிருந்து ஒருவர் வெளியேற வேண்டியிருக்கும். என்ன பக்கு பக்குன்னு அடிச்சுக்குதா? எனக்கும் அடிச்சுக்குது. நெஞ்சோடு அணைத்துக் கொண்டிருக்கிறேன். உங்கள் அனுமதியோடு” என எலிமினேஷன் கார்டை எடுக்கிறார்.

இரண்டாவது ப்ரோமோ : ‘ஜொலித்தவர் லிஸ்ட்ல இமான் அண்ணாச்சி தான். காணாமல் போனவர்னா அது சின்னப்பொண்ணு அம்மாவும், நாடியா சங்கும் தான்’ என்கிறார் அபிஷேக். ‘நிறைய பேர் காணாம போயிருக்காங்க, ஆனா அவங்கள எல்லாம் இவங்களுக்கு தெரில, என்ன மட்டும் தெரிஞ்சிருக்குன்னா, என்ன நோட் பண்ணிருக்காங்க, ஸோ நான் காணாம போகல’ என்கிறார் நாடியா. மறுபக்கம் கதறியழுகிறார் சின்னப்பொண்ணு. பின்னர் ’சத்தியமா மக்கள் மத்தியிலும், இவங்க முன்னாடியும் நான் காணாம போகவே மாட்டேன் சார்’ என கமலிடம் கூறுகிறார்.

மூன்றாவது ப்ரோமோ : போட்டியாளர்கள் யாரெல்லாம் வெற்றிபெறும் வியூகத்துடன் இருக்கிறார்கள் எனக் கேள்வி எழுப்புகிறார் கமல். அதற்கு ஐக்கி பெர்ரியும், பாவனியும் அபிஷேக்கை குறிப்பிடுகிறார்கள். அதோடு பிரியங்கா வியூகத்துடன் இருப்பது போல் தெரியவில்லை என்றும், ஆனால் அவ்வப்போது கொளுத்திப் போடுவது போல் தெரிகிறது எனவும் கூறுகிறார் ஐக்கி.

இதையடுத்து பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் முதல் நபர் யாரென்று தெரிந்துக் கொள்ள ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள். இந்நிலையில் பிக் பாஸ் போட்டியாளர் நாடியா சங் இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.