டெல்லி: தனது தமிழக வருகை மறக்க முடியாதது என,  தான் கலந்துகொண்ட நிகழ்வு மற்றும் தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு தொடர்பான வீடியோவை வெளியிட்டு  பிரதமர் மோடி டிவிட் பதிவிட்டுள்ளார்.

பிரதமர் மோடி நேற்று வருகை தந்தார். அப்போது,  நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியியின்போது,  இருந்த மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா உருவ படத்திற்கு மரியாதை செலுத்தினார்.  அதையடதது, பிரதமருக்கு முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கினார்கள்.

அதையடுத்து, பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.குறிப்பாக  பிரதமர் மோடி ரூ.3770 கோடி செலவில் முடிக்கப்பட்டுள்ள சென்னை மெட்ரோ ரயில் பகுதி-1 விரிவாக்கத்தைத் தொடங்கி வைத்தார். வண்ணாரப்பேட்டையிலிருந்து, விம்கோ நகர் வரையிலான பயணிகள் ரயில் சேவையை தொடங்கி வைத்தார்.

இந்நிலையில், தனது தமிழக வருகை குறித்து, பிரதமர் மோடி வீடியோவுடன் டிவிட் பதிவிட்டுள்ளார். எனது தமிழக வருகை மறக்க முடியாதது. மக்களின் அன்பு தம்மை நெகிழச் செய்ததாக கூறி, அத்துடன் தான் கலந்துகொண்ட நிகழ்ச்சி தொடர்பான வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.