சென்னை:

மழை காரணமாக இன்று நடந்த முரசொலி பவள விழா ஒத்திவைக்கப்பட்டது.

சென்னையில் தி.மு.க. ஆதரவு நாளிதழான முரசொலி பவள விழா துவங்கியது. இன்றும் சென்னை நந்தனத்தில் பல்வேறு நிகழச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டிருந்தன. இந்நிலையில் மழை காரணமாக பவள விழா ஒத்தி வைக்கப்பட்டது.

இது தொடர்பாக துரைமுருகன் கூறுகையில், ‘‘அனைத்து அரசியல் தலைவர்களும் பங்கேற்பதற்காக மீண்டும் பிரம்மாண்டாய் பவள விழா அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடக்கும்’’ என்றார்.

முன்னதாக பவள விழா மலரை வெளியிட்டு செயல் தலைவர் ஸ்டாலின் கூறுகையில். ‘‘மீண்டும் முரசொலி பவள விழா இதைவிட பெரிதாய் நடத்தப்படும். தேவைப்பட்டால் இந்த ஆட்சி மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படும்’’ என்றார்.