சென்னை: வரும் கல்வியாண்டில் இருந்து M.Phil படிப்பு முழுமையாக நீக்கம் செய்யப்படுவதாக யுஜிசி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

முதுநிலை பட்டதாரிகளுக்கான, எம்.பில்., படிப்புக்கு வேலைவாய்ப்புகள் குறைந்து விட்டதால், புதிய கல்வி கொள்கைப்படி, எம்.பில்., படிப்புக்கு, நடப்பு கல்வி ஆண்டு முதல், மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டாம் என, யு.ஜி.சி., எனப்படும், பல்கலை மானிய குழு கடந்த ஆண்டே (2021) உயர்கல்வி நிறுவனங்களுக்கு கடிதம் அனுப்பியது. இதையடுத்து, பல மாநிலங்கள் இதைப் பின்பற்றி எம்பில்., படிப்பை நிறுத்துவதாக அறிவித்துள்ளன. தமிழ்நாட்டிலும் சில தனியார் பல்கலைக்கழகங்கள் ஏற்கன எம்.பிஃல் படிப்பை நிறுத்தி உள்ளன.

ஆனால், தமிழக அரசின்  புதிய கல்வி கொள்கை மீதான எதிர்ப்பால், அரசு பல்கலைக்கழகங்களில் எம்.பில்., படிப்பை நடத்துவதா, வேண்டாமா என, பல்கலைகள் குழப்பம் அடைந்திருந்தன. இந்த நிலையில், வரும் கல்வியாண்டில் இருந்து M.Phil படிப்பு முழுமையாக நீக்கப்படுகிறது என யுஜிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. கற்பித்தல் பணிக்கு M.Phil., தகுதியானது இல்லை என்பதால், M.Phil., படித்திருந்தாலும் அதை ஒரு தகுதியாக குறிப்பிட முடியாது என்று தெரிவித்துள்ள யுஜிசி,  ஏற்கெனவே வழங்கப்பட்டு வந்த M.Phil பட்டங்கள் செல்லும் என்றும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.