சென்னை: தமிழகத்தில் நடமாடும் ‘ அம்மா ரேசன் கடைகள்’ அமைக்கப்படுவதாக  தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. அதில்,  9.66 கோடி ரூபாய் மதிப்பில் மொத்தம் 3,501 ரேஷன் கடைகள் அமைக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து வெளியான அரசாணையில், தமிழகத்தில் ரூ.9.66 கோடியில் 3,501 நடமாடும் அம்மா ரேசன் கடைகளை திறக்கப்படும்.
இதன் மூலம்  சுமார் 5.36 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவர்.

நடமாடும் ரேஷன் கடைகள் செயல்படும் இடம்,நேரம், நாட்களுக்கு ஆட்சியர் அனுமதி பெற வேண்டும் .

அரசு கட்டடம், உள்ளாட்சி நிறுவன கட்டடம், மக்கள் கூடும் இடங்களில் நடமாடும் ரேஷன் கடையை திறக்கலாம்.

இதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி ஆகஸ்டு 20-ம் தேதிக்குள் அனைத்து மண்டல இணை பதிவாளர்கள் அறிக்கை தரவேண்டும் என கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் தெரிவித்துள்ளார்.