சென்னை

சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 12 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யலாம் என அறிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாகத் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக உள்ளதால் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தில் இன்று முதல் 11 ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

தற்போது, அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதாவது கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, திருச்சி, ராமநாதபுரம், சிவகங்கை, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.