சென்னை: 20க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்புணர்வு செய்து வீடியோ எடுத்து மிரட்டி வந்த சென்னை மாடல் மற்றும்  துணைநடிகர் முகமது சையது (வயது 27)  ஏற்கனவே காவல்துறையினரால்  செய்யப்பட்ட நிலையில், அவர்மீது குண்டாஸ் சட்டத்தின் மீது நடவடிக்கை எடுத்து, காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை புரசைவாக்கம் மில்லர் சாலையில் உள்ள பிரபல அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருபவர் சென்னையைச் சேர்ந்த  27 வயதான முகமது சையது. இவர் மாடலில் துறையில் உள்ளார். இதற்கான கட்டுமஸ்தான உடல்வாகுடன், பார்ப்போரை எளிதில் கவரும் வகையிலும், தனது நடத்தையை மெருக்கேற்றியிருப்பார். சில படங்களில் இவர் துணைநடிகராகவும் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ஹூக்கா என்கிற போதை பழக்கத்திற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது.

இவர் தன்னுடன் இணைந்து நடிக்கும் மாடல்கள் உள்பட பல இளம்பெண்களுக்கு காதல்வலை வீசி உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். சிலருக்கு திருமண ஆசை காட்டியும் வன்புணர்வு செய்து ஏமாற்றி உள்ளார். இதற்காக தனது ஆடம்பர வீட்டில் பிரத்யேக படுக்கை அறையை அமைத்து, அதில் வீடியோ பதிவும் செய்து வந்துள்னார். சமார் 20க்கும் மேற்பட்டோரிடம் சையது தனது கைவரிசையை காட்டியுள்ளார். சிலரிடம் வீடியோவை காட்டி அவ்வப்போது படுக்கைக்கு அழைத்துள்ளதும் தெரிய வந்துள்ளது.

இவர் மீது மூன்று இளம் பெண்கள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பாலியல் புகார் அளித்திருந்தனர்.தங்களை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி பாலியல் வன்புணர்வு செய்ததாகவும் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து,  வேப்பேரி மகளிர் போலீசார்  வழக்குப்பதிவு செய்து கடந்த மார்ச் மாதம் முதல் ரகசியமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

விசாரணையில் முகமது சையது வலையில்,  பல இளம் பெண்கள் சிக்கி உள்ளதுங்ம, அவர்களை  பண்ணை வீடு,  நட்சத்திர ஓட்டலுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளது தெரிய வந்தது. மேலும், பெண்களை பாலியல் வன்கொடுமை செய்வதற்கென்றே தனது வீட்டிலும் ஒரு ஸ்பெஷல் அறை  தயார் செய்து வைத்திருக்கிறார்.   பெண்களுடன் உல்லாசமாக இருக்கும்போது அதை ரகசியமாக வீடியோ எடுத்திருக்கிறார்.   பின்னர் அந்த வீடியோவை காட்டி மிரட்டி பணம் நகையை பறித்து வாழ்ந்து வந்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, அவரை கைது செய்ய எண்ணிய மகளிர் போலீசார்,  கடந்த மார்ச் மாதம்,  24ம் தேதியன்று  பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர்போல மெசேஜ் அனுப்பி அவரிடம் தொடர்பு கொண்டனர். அதைப்பார்த்த சையது, வேப்பேரியில் உள்ள உடற்பயிற்சி கூடத்திற்கு அருகில் வரச் சொல்லி   இருக்கிறார் அப்போது அங்கு மறைந்திருந்த காவல்துறையினர் முகமது சையது  மடக்கி பிடித்தனர்.

முகமது ஷயாத்திடம் நடந்த விசாரணையில்,   இந்த மூன்று பெண்கள் மட்டுமல்ல 20 பெண்களை அனுபவித்து இருக்கிறேன் என்பதை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.  இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளளார். அவரது  கைது விவகாரம் வெளியே தெரியாத வகையில் இருந்து வந்தது.

ஆனால், நேற்று முகமது சையதை  ஜாமீனில் வெளியே வர முடியாத படி மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால்  குண்டர் தடுப்பு சட்டத்தை உபயோயகப்படுத்திய நிலையில், இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.