சென்னை

ன்று பிரதமர் மோடி வேலூர் மற்றும் மேட்டுப்பாளையத்தில் தேர்தல் பிரசாரம் செய்கிறார்.

வரும் 19 ஆம் தேதி தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. நாடாளுமன்றத் தேர்தலுக்குச் சில நாட்களே உள்ளதால் பிரசாரம் களைகட்டி உள்ளது. நாடெங்கும் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் தீவிரப் பிரசாரம் செய்து மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.

நேற்று பாஜக வேட்பாளர்களை ஆதரித்து சென்னை பாண்டி பஜாரில் பிரதமர் மோடி பிரமாண்ட வாகனப்பேரணியை நடத்தினார். சாலையில் இருபுறமும் திரண்டு நின்ற மக்கள், மலர்களைத் தூவி பிரதமரை உற்சாகமாக வரவேற்றனர்.

பிரதமர் மோடி இன்று  காலை சென்னையில் இருந்து வேலூர் சென்று அங்கு நடைபெறும் பிரமாண்டப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று புதிய நீதிக்கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்துக்கு ஆதரவு திரட்டிய பிறகு, கோவை சென்று அங்கிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் பிரதமர் மோடி, அங்கு நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்கிறார்

பாஜக வேட்பாளர்கள் எல்.முருகன் (நீலகிரி), அண்ணாமலை (கோவை), அவர் கே.வசந்தராஜன் (பொள்ளாச்சி), ஏ.பி.முருகானந்தம் (திருப்பூர்), கே.பி.ராமலிங்கம் (நாமக்கல்), கூட்டணிக் கட்சி வேட்பாளர்களான த.மா.கா.வை சேர்ந்த பி.விஜயகுமார் (ஈரோடு), பா.ம.க.வை சேர்ந்த ந.அண்ணாதுரை (சேலம்) ஆகியோருக்கு ஆதரவு திரட்டுகிறார்.

வேலூர், கோவை, மேட்டுப்பாளையத்தில் பிரதமர் மோடி வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.