சென்னை: 
மிழகத்தில் வரும் 19-ஆம் தேதி வரை மிதமான மழை வாய்ப்பு  உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,   தென்மேற்கு பருவக்காற்றால் தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், வரும் 19ம் தேதி வரை மிதமான மழை தொடரும் எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில்,  நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.