கோவை

விளம்பரம் பார்த்தால் பணம் என அறிவித்து மோசடி செய்ததாக ஒரு தனியார் நிறுவா செயலி முடக்கப்பட்டுள்ளது.

தனியார் நிறுவனம் ஒன்று கோவையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. நிறுவனத்தின் செல்போன் செயலி மூலம் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்தால் அதில் உறுப்பினர் ஆகலாம் என்றும், அந்த செயலியில் கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதில் அளிப்பது, அதில் வரும் வீடியோக்களில் விளம்பரங்களைப் பார்ப்பதன் மூலம் வருமானம் ஈட்டலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனால் நாள் ஒன்றுக்கு ரூ.5 முதல் ரூ.1000 வரை வருவாய் ஈட்டலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

லட்சகணக்கான பொதுமக்கள் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து, அதன்மூலம் பல கோடி ரூபாயை முதலீடு செய்தனர். பொதுமக்களிடம் இருந்து அதிகளவு முதலீடு பெற்றது தொடர்பாக இந்த தனியார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சத்தியானந்த் என்கிற சக்தி ஆனந்தன் மீது வழக்குப்பதிவு செய்தனர். அந்த நிறுவனத்திற்கு ஆதரவாகச் சிலர் எல் அண்டு டி கோட்டில் கூடி இது தொடர்பாக சிங்காநல்லூர் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றது.

தனியார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சக்தி ஆனந்தன் மர்ரும் அவர் நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் ஏராளமானோர் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்தனர்.

அவர்கள்

”சக்தி ஆனந்தன் உள்ளிட்டோர், காவல்துறையிடம் தங்களது நிறுவனத்திற்கு எதிரான சமூக வலைத்தளங்களில் பொய்யான செய்திகளைப் பரப்பி வருகின்றனர். இதனால் முதலீட்டாளர்கள் இடையே அச்சம் ஏற்பட்டு உள்ளது. எனவே மாநகர காவல்துறை ஆணையரைச் சந்தித்து மனு அளிக்க வேண்டும்”

என்று தெரிவித்தனர்.

காவல் துறையினர், தற்போது ஆணையர் முக்கிய ஆய்வுக் கூட்டத்தில் உள்ளதால் தங்களிடம் மனுவை வழங்கும்படியும், அதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தனர். சக்தி ஆனந்தன் மற்றும் அவருடன் வந்தவர்கள் ஆணையரைக் கண்டிப்பாகச் சந்திக்க வேண்டும் என்று கூறியதுடன், ஆணையர் அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் போராட்டத்தை கைவிட்டுக் கலைந்து செல்ல மறுத்தனர். எனவே காவல்துறை தனியார் நிறுவன நிர்வாக இயக்குநர் சக்தி ஆனந்தன் உள்பட 100க்கும் மேற்பட்டோரைக் கைது செய்தது..

காவல்துறையினரிடம் நிறுவனம் மோசடியில் ஈடுபடுவதாக நிறுவனம் மீது புகார் அளிக்கப்பட்டநிலையில் தனியார் நிறுவத்தின் sஎயலி தற்போது முடக்கப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.