சென்னை: தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், தனது சொந்த தொகுதியான கொளத்தூர் தொகுதியில் இன்று பிற்பகல் முதல் பிரசாரம் மேற்கொள்கிறார்.

மாலை 3 மணிக்கு பிரசாரத்தை தொடங்கும் ஸ்டாலின் இரவு 10 மணி வரை பல்வேறு இடங்களில் வாக்கு சேகரிப்பதுடன் உரையாற்றுகிறார். அவரது  பிரசாரம் செய்யும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாலை 3 மணி  கொளத்தூர் கிழக்கு பகுதியில் உள்ள காசி விஸ்வநாதன் கோவில் பகுதியில் பிரசாரம்  தொடங்கி,  அன்னை சத்யா நகர், அயனாவரம் பஸ் நிலையம், ஆண்டர்சன் சாலை, ராகேவந்திரா கோவில், திருக்காகுளம் சலவை செய்யும் இடம், ரெயில்வே ரோடு, மைலப்ப தெரு, பங்காரு தெரு ஜங்ஷன் ஆகிய இடங்களில் ஆதரவு திரட்டுகிறார்.

தொடர்ந்து,  பில்கிங்டன் ரோடு, வசந்த கார்டன், மதுரை தெரு ஜங்ஷன், பெரம்பூர் மேம்பாலம், பந்தர் கார்டன், மாதவரம் நெடுஞ்சாலை, ரமணா நகர், சின்னக்குழந்தை 2-வது தெரு, மடுமா நகர் 1-வது தெரு, முகுந்த ராமானுஜம் தெரு, செயிண்ட் மேரிஸ் கல்லூரி, மாதவரம் நெடுஞ்சாலை, கமலம்மாள் கல்யாண மண்டபம், திருநாவுக்கரசு தெரு, ராகவன் தெரு, பாக்ஸன் தெரு வழியாக வாக்கு சேகரிக்கிறார்.

அதைத்தொடர்ந்து, கொளத்தூர் தொகுதி மேற்கு பகுதியான ரங்கசாயி தெரு, துலக்கணத்தம்மன் கோவில் தெரு, பல்லார்டு தெரு, ஜெகநாதன் தெரு, தாந்தோன்றி அம்மன் கோவில் தெரு, பாலவாயில் ரோடு, லோகோ ஒர்க்ஸ், ஜி.கே.எம். காலனி 1 முதல் 20-வது தெரு வரை மு.க.ஸ்டாலின் இன்று பிரசாரம் மேற்கொள்கிறார்.

மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்க கொளத்தூர் தொகுதி முழுவதும் திமுகவினர் உற்சாகமாக பணியாற்றி வருகின்றனர்.