ஸ்ரீஹரிகோட்டா: மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் முதற்கட்ட சோதனையாக இன்று  ககன்யா மாதிரி விண்கலம் சோதனை  காலை 8மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வானிலை மற்றும் இயந்திர கோளாறு காரணமாக, அந்த திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருப்பதாக இஸ்ரோ அறிவித்து உள்ளது.

காலை 8.30 மணிக்கு ஏவுவதற்கான இறுதிக்கட்ட கவுண்டவன் நடைபெற்று வந்த நிலையில், இறுதி நேரத்தில் இயந்திர கோளாறு கண்டறியப்பட்டால், சோதனை ஓட்ட பணிகள் நிறுத்தப்பட்டு உள்ளன. 

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ,  விண்ணுக்கு மனிதனை அனுப்பும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது.  அதற்காக ககன்யான் என்ற திட்டத்தை அறிவித்து, ஆய்வு செய்து வருகிறது. கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த ஆய்வுகள் இடையில் கொரோனா தொற்று காரணமாக தாமதமான நிலையில், பின்னர் கடந்த ஆண்டு முதல் மீண்டும் தீவிரப்படுத்தியது.

அதன்படி, ககன்யான் திட்டத்தின் முதல்படியாக, இன்று சோதனை ஓட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.  இதற்கான  ககன்யான் திட்டத்தின் மாதிரி விண்கலம் TV-D1 ராக்கெட் மூலம் செலுத்தப்படும் என தெரிவித்த இஸ்ரோ, இந்த தரையில் இருந்து 16.6  கி.மீ. தூரம் வரை அனுப்பி, மீண்டும் அதை பூமிக்கு கொண்டுவந்து வங்கக்கடலில் இறக்கப்படும் என்றும்  இந்த சோதனை வெறும் 20 நிமிடத்தில் நிறைவு பெறும் என்றும்,

விண்ணில் ஏவப்படும் மாதிரி விண்கலத்தில் இருந்து மாதிரி விண்கலம் 16.6 கி.மீ தூரம் சென்றதும் வினைகளத்தில் வீர்ரகள் அமரும் பகுதி தனியாக பிரிந்துவிடும் என்றும், பின் பாராசூட் மூலம், பாராசூட்கள் மூலம் ஹரிகோட்டாவில் இருந்து 10 கி.மீ. தூரத்தில் வங்கக்கடலில் பத்திரமாக இறக்கப்படும். இந்திய கடற்படையின் சிறப்பு கப்பல் மற்றும் நீச்சல் குழுவினர் வங்கக்கடலில் விழுந்த விண்கலத்தை மீட்டு இஸ்ரோ அதிகாரிகளிடம் ஒப்படைப்பார்கள் என இஸ்ரோ  தெரிவித்தது.

இதைத்தொடர்ந்து, மாதிரி விண்கலத்தை ஏவுவதற்கான 24மணி நேர கவுண்டவுன் நேற்று காலை 8மணிக்கு தொடங்கியது. இந்த நிலையில்,  தற்போது ககன்யான் சோதனை ஓட்டம் நிறுத்தி வைக்கப்படுவதாக இஸ்ரோ அறிவித்து உள்ளது.

முதலில், மோசமான வானிலை காரணமாக விண்ணில் ஏவும் நேரம் தாமதமாகும் என கூறப்பட்டது. இந்த நிலையில், தற்போது,  என்ஜின் கோளாறு காரணமாக சோதனை ஓட்டம் நிறுத்தம்  என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கூறிய இஸ்ரோ தலைவர் சோம்நாத்,  ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள முதல் ஏவுதளத்தில், மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் முதற்கட்ட சோதனை இன்று நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளதாகவும், இதனால், ககன்யான் திட்டத்திற்கான முதல் கட்ட சோதனை ஓட்டம் தள்ளி வைக்கப்படுவதாக அறிவித்தார்.

மாதிரி விண்கலத்தில் கண்டறியப்பட்ட என்ஜின் கோளாறு காரணமாக சோதனை ஓட்டம் நிறுத்தம்  செய்யப்படுவதாக கூறியவர், திட்டமிட்டப்படி என்ஜின் செயல்படாததால் ராக்கெட்டை ஏவ முடியவில்லை என்றும், விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு குறித்து ஆய்வு செய்வோம்  என்றும் தெரிவித்தார்.