மதுரை:

எம்ஜிஆரின் வாரிசு என்றால் அதிமுகவில் இணையவேண்டியதானே? என்று கமல்ஹாசனுக்கு செல்லூர் ராஜு கேள்வி எழுபியுள்ளார்.

மதுரை துவரிமானில் செய்தியாளர்களிடம் பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே ராஜூ, “எய்ம்ஸ் மருத்துவமனை பற்றி பேசுவதற்கு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் நிற்க தகுதி கிடையாது. திமுக ஆட்சிக்காலத்தில் இடத்தையே கையகப்படுத்தும் பல் மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும் என பொய்யை கூறி வந்தார்கள். ஆட்சியில் இருந்தபோது மக்களுக்கு எதுவும் செய்யாமல் ஆட்சியில் இல்லாதபோது சிறப்பாக செயல்படும் அரசை குறை கூறி வருகிறார்கள்.

கமல்ஹாசனை கட்சித் தலைவராகவே மக்கள் ஏற்றுக் கொள்ளாத நிலையில் மக்கள் அவரை நடிகராகவே பார்க்கின்றனர். அவர் என்ன பேசுகிறார் என்று அவருக்கும் தெரியவில்லை நமக்கும் தெரியவில்லை.

அதிமுக வந்தவுடன் தான் பெண்கள் முன்னிலைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.இது தமிழகத்தில் உள்ள அனைத்து பெண்களுக்கும் தெரியும் , பெண்களின் வாழ்க்கை அதிமுகவுக்கு அதிகம் விழுகின்றது. கமலஹாசன் எம்ஜிஆரின் வாரிசு என கூறி வருகிறார் அப்படி என்றால் அவர் அதிமுகவில் தான் சேர்ந்து இருக்க வேண்டும். தனியாக கட்சி தொடங்கி இருக்கக்கூடாது” எனக் கூறினார்.