புதுக்கோட்டை:
காவிரியில் மூழ்கி உயிரிழந்த 4 மாணவிகளின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

புதுக்கோட்டையில், காவிரியில் மூழ்கி உயிரிழந்த மாணவிகளுக்கு அமைச்சர் ரகுபதி அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்றார். `

மேலும், பேசிய அவர், “கூட்டிச் செல்லும் பணிகளை மட்டும் முடித்துவிட்டு, மாணவ, மாணவிகளை அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.

இந்நிலையில், காவிரி ஆற்றில் நீரில் மூழ்கி உயிரிழந்த 4 பள்ளி மாணவிகளின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.