மதுரை: தமிழ்நாடு அமைச்சர் ஐ.பெரியசாமி திடீர் உடல்நலப் பாதிப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது அவரது ஆதரவாளர் களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திமுக துணை பொதுச்செயலாளரும், தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அமைச்சருமான ஐ.பெரியசாமிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் மதுரை யில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு மருத்துவர்கள்  சிகிச்சை  அளித்து வருவதாகவும், பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.  அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என கூறப்படுகிறது.

ஆனால், அவருக்கு என்ன பிரச்சினை என்பது குறித்த எந்தவொரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை.