சென்னை: காலணி தயாரிப்பில் ஈடுபட்டு வரும் அனைத்து ஊழியர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.

கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மத்திய மாநில அரசுகள் அடுத்தடுத்து அறிவித்து வரும் பொதுமுடக்கம் காரணமாக சாமானிய மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. இந்த நிலையில்,   காலணி தயாரிப்பில் ஈடுபடும் ஊழியர்களுக்கு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அதனப்டி,குறைந்தபட்ச ஊதியச் சட்டத்தின் கீழ், ஊதியத்தை நிர்ணயம் செய்து தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அரசாணை வெளியீடுள்ளது.   தொழிற்சாலைகள் மற்றும் சிறு – குறு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அதில், காலணி தயாரிப்பில் ஈடுபடும் ஊழியர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் நிர்ணயம் செய்து அறிவிக்கப்பட்டு உள்ளது. நகராட்சிகள், மாநகராட்சிகள் பணிபுரிவோருக்கு தனியாகவும், இதர பேரூராட்சிகள், ஊராட்சிகள் பணிபுரிவோருக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மாநகராட்சிகளில் பணிபுரிந்து வரும் காலணி தயாரிக்கும் ஊழியர்களுக்கு குறைந்த பட்ச ஊதியமாக 4 ஆயிரத்து 933 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பேரூராட்சிகள் நகராட்சிகள் பணிபுரிவோருக்கு 4 ஆயிரத்து 843 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கணக்காளர், ஸ்டோர் கீப்பர், அலுவலக உதவியாளர், ஓட்டுநர், வாட்ச்மேன் என அனைவருக்கும் குறைந்த பட்ச ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

குறைந்தபட்ச ஊதியத்தை நிறுவனங்கள் கட்டாயம் வழங்க வேண்டும் என்றும் ஏற்கனவே ஊதியம் அதிகமான தொகையாக வழங்கப்பட்ட வந்தால் அதை தொடர வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசு குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் ஆண்கள், பெண்கள் அதிக அளவில் பணிபுரியும் காலணி தயாரிப்பு தொழிற்சாலையில் ஊதியத்தை சமமாக பாகுபாடின்றி வழங்க வேண்டும் என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.