விருதுநகர்: விருதுநகர் அருகே இன்று காலை நடைபெற்ற  கல்குவாரி வெடி விபத்தில் சிக்கி 4 பேர் பலியான சோகம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ஆவியூரில் கல்குவாரியில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. தனியாருக்கு சொந்தமான இக்குவாரியில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4  பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியானது. இந்த வெடிவிபத்தில் அருகில் உள்ள வீடுகள் சேதமடைந்த நிலையில், வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் ஆங்காங்கே சிதறிகிடக்கின்றன.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், தீயணைப்பு துறையினர் விரைந்த வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்த விபத்தில் சிக்கியவர்களின் உடல் பாகங்கள் ஆங்காங்கே சிதறிக் கிடப்பதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. கிரஷர் குவாரியில் வெடி வைக்கையில் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.