சென்னை

திருச்சி தொகுதியில் மதிமுக சார்பாக துரை வைகோ போட்டியிடுகிறார்.

நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்துள்ளது. இந்த கூட்டணியில் ம.தி.மு.க.வுக்கு திருச்சி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் தி.மு.க. தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் கையெழுத்தானது.  கடந்த முறை திருச்சி தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், தற்போது ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ம.தி.மு.க. சார்பில் திருச்சி தொகுதியில் துரை வைகோ போட்டியிடுவார் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். மதிமுக ஆட்சி மன்றக் குழுவில்  துரை வைகோ போட்டியிட ஒருமனதாக ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் வைகோ ,

”மதிமுக வேட்பாளராக திருச்சி தொகுதியில் துரை வைகோ போட்டியிடுகிறார். தேர்தல் ஆணையத்திடம் பம்பரம் சின்னம் கேட்டு மனு அளித்துள்ளோம். அதன்படி பம்பரம் சின்னம் கிடைத்தால் மகிழ்ச்சியாக இருக்கும். ஒருவேளை பம்பரம் சின்னம் கிடைக்காவிட்டால், தேர்தல் ஆணையம் ஒதுக்கும் சின்னத்தில் போட்டியிடுவோம்”

என்று தெரிவித்துள்ளார்.