சென்னை

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ளது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.  இதில் தி.மு.க. கூட்டணியில், கூட்டணி கட்சிகளுக்கு மொத்தம் 19 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு எஞ்சிய 21 தொகுதிகளில் தி.மு.க. போட்டியிட உள்ளது.

இந்த கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நாகப்பட்டினம் (தனி), திருப்பூர் ஆகிய 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. வேட்பாளர்கள் யார் எனத் தேர்வு செய்யும் பணி கம்யூனிஸ்ட் கட்சியில் தீவிரமாக நடந்து வந்தன.

இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் களமிறங்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் திருப்பூர் தொகுதியில் கே.சுப்பராயன் போட்டியிடுகிறார். மேலும் நாகை தொகுதியில் வை.செல்வராஜ் போட்டியிடுகிறார்.