கோவை

ரோடு தொகுதி மதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி தற்கொலைக்கு முயன்று சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.

ஈரோடு தொகுதி கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இருந்த ம.தி.மு.கவுக்கு ஒதுக்கப்பட்டது.  ஈரோடு தொகுதியில் மதிமுகவின் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் ஈரோடு தொகுதியில் நேரடியாக தி.மு.க. போட்டியிடுகிறது. எனவே கணேசமூர்த்திக்கு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் சில நாட்களாக அவர் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்பட்டது.

கடந்த 24-ந்தேதி கணேசமூர்த்தி திடீரென மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்பட்டது.  இதையொட்டி அவர் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

கோவை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த ஈரோடு மதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்., கணேசமூர்த்தி, சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். அவருக்குத் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், மாரடைப்பு ஏற்பட்டு காலை 5.05 மணிக்கு உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.