சென்னை

மிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முன்கூட்டியே நடத்த வேண்டும் என்னும் கோரிக்கையைச் சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது.

நாடெங்கும் நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழகத்தில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரேகட்டமாகத் தேர்தல் நடைபெற்று வாக்குகள் ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்பட உள்ளன.

எனவே

”மக்கள் 45 நாட்கள் தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பில் மக்கள் இருக்க வேண்டியுள்ளது. தேர்தல் அறிவிப்பு, சட்ட விதிகளையும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தையும் மீறும் வகையில் உள்ளது. தமிழகத்தில் முன்கூட்டியே வாக்கு எண்ணிக்கையை நடத்த வேண்டும்”

என்னும் கோரிக்கையுடன் எழிலன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

நேற்று இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள், தேர்தல் தேதி, வாக்கு எண்ணிக்கை தேதி அறிவிப்பு என்பது முழுக்க முழுக்க தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்துக்கு உட்பட்டது. இந்த வழக்கு விளம்பர நோக்குடன் தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனக்கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

தேர்தல் நடவடிக்கைகளைக் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்க வேண்டும் என மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் எந்த காலக்கெடுவும் விதிக்கப்படவில்லை என்பதால் இதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.