மயிலாடுதுறை:
ருமபுர ஆதின பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சிக்கு விதித்த தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மயிலாடுதுறை கோட்டாட்சியர் அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளார்.

தருமபுரம் ஆதீனத்தில் பாரம்பரியமாக நடைபெறும் பட்டின பிரவேசம் நிகழ்வுக்கு மாவட்ட வருவாய்த் துறை தடை விதித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தடையை நீக்கும்படி அதிமுக, பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கோரிக்கை விடுத்தன.

இந்நிலையில், தருமபுர ஆதின பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சிக்கு விதித்த தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மயிலாடுதுறை கோட்டாட்சியர் அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளார்.

இதுகுறித்து மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
பட்டின பிரவேச நிகழ்ச்சியில் தரும்புர ஆதீனத்தை பல்லக்கில் தூக்கிச் செல்ல தடை என ஏப்ரல் 27ஆம் தேதி வெளியிட்ட ஆணையை விலக்கிக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.