சென்னை:
சென்னை மற்றும் மதுரையில் இயங்கும் உயர்நீதிமன்றங்களில் இன்றிலிருந்து முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ள நிலையில், உயர் நீதிமன்ற மதுரைக் கிளைக்கு வருவோர் முகக்கவசம் அணிவது கட்டாயம் என உத்தரவிடப்பட்டு உள்ளது.

கொரோனா பரவல் அதிகரிப்பை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.