சென்னை:
மிழ்நாட்டில் தங்கியுள்ள தங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக, போலியாக வீடியோ வெளியிட்ட ஜார்கண்டை சேர்ந்த மனோஜ் யாதவ் மன்னிப்பு கேட்கும் வீடியோவை வெளியிட்டது தமிழ்நாடு போலீஸ்.

தமிழ்நாட்டில் வேலை செய்து வரும் வெளிமாநிலத்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக வதந்திகள் பரவியது. இதுபெரும் சர்ச்சையானது. இதையடுத்து, வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்குச் செல்வதாகவும் தகவல் வெளியானது.

இதையடுத்து, தமிழக முதல்வர் இதுகுறித்து தவறான தகவல்கள் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.

எனவே, வடமாநிலத் தொழிலாளர்கள் விவகாரம் பற்றி விசாரிக்க பீகார் மா நிலத்தில் இருந்து, 4 அதிகாரிகள் தமிழகம் வந்து கோவை உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கபடுவதாக வதந்தி பரப்பிய மனோஜ் யாதவ் என்பவரை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர்.