கன்னியாகுமரி: பிரதமர் மோடியின் பிரச்சார கூட்டத்துக்கு வருவோருக்கு பணம் கொடுத்தவரிடம் ரூ.10,500ஐ பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

வரும் 6ம் தேதி தமிழக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் திமுக, அதிமுக, மநீம, அமமுக, நாதக என பலமுனை போட்டி காணப்படுகிறது. ஆனாலும், திமுக, அதிமுக  கூட்டணி இடையே பலத்த போட்டி நிலவுகிறது.

வாக்காளர்களை கவரும் வகையில் பல பகுதிகளில் கட்சியினர் பணம் கொடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை கண்காணிக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர ரோந்து சுற்றி வருகின்றனர்.

இந் நிலையில், கன்னியாகுமரியில் பிரதமர் மோடியின் பிரச்சார கூட்டத்துக்கு வருவோருக்கு பணம் கொடுத்தவரிடம் ரூ.10,500ஐ பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். தென்தாமரைக்குளம் பகுதியில் கூட்டத்துக்கு வருவோருக்கு பணம் கொடுத்ததாக தேரிவிளை முருகன் என்வரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.