முப்படை தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் கடந்த புதனன்று குன்னூரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்தார்.

இவரது மரணம் குறித்து மதரீதியாக அவதூறு பரப்பும் நோக்கில் சமூக வலைத்தளங்களில் சில பதிவுகள் போடப்பட்டன.

இதனைத் தொடர்ந்து விபத்து குறித்தோ மத ரீதியாகவோ சர்ச்சைக்குரிய கருத்துகளை பதிவிட வேண்டாம் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்ததோடு, இந்த பதிவுகள் குறித்தும் விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில், 20 க்கும் மேற்பட்ட மலையாளப் படங்களை இயக்கிய இயக்குனர் அலி அக்பர் தனது மனைவியுடன் தான் சார்ந்த மதத்தில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.

இயக்குனர் அலி அக்பர் 2014 ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பாக கொடுவாளி தொகுதியில் போட்டியிட்டவர் என்பதும் பின்னர் நடந்த கோழிக்கோடு மாநகராட்சி தேர்தலில் பா.ஜ.க. சார்பிலும் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.