தங்கல் படத்தை இயக்கிய நித்தீஷ் திவாரி ராமாயண கதையை ராமாயணா 3டி என்ற பெயரில் இயக்குகிறார். பிரமாண்டமாக தயாராகும் 3டி திரைப்படம் இது.

இந்தப் படத்தில் சீதையாக தீபிகா படுகோனும், ராவணனாக ஹிர்த்திக் ரோஷனும் நடிக்கின்றனர். ராமாணயா 3டி திரைப்படம் இந்தியில் தயாராகிறது.

இதில் ராமனாக நடிக்க தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவிடம் கேட்டிருந்தனர். மகேஷ் பாபு தனக்கென தனித்த கொள்கைகள் கொண்டவர். அதில் ஒன்று பிற மொழிகளில் நடிப்பதில்லை என்பது. அதேபோல், ரீமேக் படங்களில் நடிப்பதில்லை என்பதையும் கடைபிடித்து வருகிறார்.