சென்னை:

காத்மா காந்தியின்  72வது நினைவுதினத்தையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள  காந்தி சிலைக்கு தமிழக கவர்னர், முதல்வர் , துணை முதல்வர் உள்பட அமைச்சர்கள், அதிகாரிகள், தியாகிகள் மலர்தூவி மரியாதை செய்தனர்.

நாட்டிற்கு சுதந்திரம் பெற்றுக்கொடுத்த மறைந்த தேசப்பிதா மகாத்மாவின் 72வது நினைவுதினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இன்றைய தினம் தியாகிகள் தினமாகவும்  அனுசரிக்கப்படுகிறது.

இதையொட்டி, சென்னையில்  மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை  வண்ண மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. அதன் கீழே காந்தி புகைப்படம் வைக்கப்பட்டு மாலை மற்றும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

இந்த படத்துக்கு இன்று காலை 10 மணி அளவில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், அதிகாரிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

தமிழகம் முழுவதும் ஆங்காங்கே காங்கிரஸ் கட்சியினரால் காந்தி மலர் அலங்கரித்து வைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.