மும்பை:

மகாராஷ்டிரா விவசாயிகள் பல்பேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிரம்மாண்ட பேரணி நடத்தினர். 180 கி.மீ. நடைபயத்துக்கு பின்னர் அனைத்திந்திய கிஸான் சபை சார்பில் மும்பை ஆஸாத் மைதானத்தில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாய சங்க பிரதிநிதிகள் 12 பேரிடம் அரசு அமைத்துள்ள 6 அதிகாரிகள் அடங்கிய உள்ளடக்கிய குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர். முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மேற்பார்வையில் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.

இதையடுத்து தங்களது போராட்டத்தை வாபஸ் பெறுவதாக விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.