இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும் பிரபல பாடகியுமான பவதாரிணி காலமானார். இவருக்கு வயது 47.

புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த அவர் இலங்கையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகக் கூறப்பட்டுள்ளது.

இளையராஜாவின் இசையில் 1995ம் ஆண்டு வெளியான ராசய்யா படத்தில் மஸ்தானா மஸ்தானா பாடல் மூலம் தமிழ் திரையுலகில் பின்னணி பாடகியாக அறிமுறைமான பவதாரிணி பல்வேறு பாடல்கள் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர்.

பாரதி படத்திற்காக இவர் பாடி மயில் போல பொண்ணு ஒன்னு பாடலுக்காக 2001ம் ஆண்டு சிறந்த பாடகிக்கான தேசிய விருது பெற்றுள்ளார்.

பவதாரிணியின் மறைவு ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.