மதுரை,

மிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளையும் மூட உத்தரவு பிறப்பித்துள்ளது. அடுத்த 6 மாதத்திற்குள் அனைத்து மணல் குவாரிகளையும் மூட வேண்டும் என்று அதிரடியாக கூறி உள்ளது.

வெளிநாட்டு இறக்குமதி மணலுக்கு அனுமதி கோரிய வழக்கில், மதுரை ஐகோர்ட்டு கிளை இந்த முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலை தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து எடுத்துச்செல்ல அனுமதி கோரி புதுக்கோட்டையை சேர்ந்த ராமையா என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு ஏற்கனவே நடைபெற்ற விசாரணையின்போது, வெளிநாட்டு மணலுக்கு அனுமதி அளிக்க மறுத்து தமிழக அரசு மனு தாக்கல் செய்திருந்தது. இரு தரப்பு விசாரணையை தொடர்ந்து, தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கில், மதுரை ஐகோர்ட்டு கிளை இன்று அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.

அந்த தீர்ப்பில்,  சுற்றுச்சூழல் நலன் கருதியும், வருங்கால சந்ததியினரின் நலன் கருதியும் தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளையும் 6 மாத காலத்திற்குள் மூட வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. புதிய மணல் குவாரிகள் அமைக்கக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது.

மேலும், தமிழகத்திற்கு தேவையான மணலை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யலாம் என்றும், அதற்கு தமிழக அரசு முறையான வழிமுறைகளை வகுக்க வேண்டும் எனவும் தெரிவித்து உள்ளது.

சட்டவிரோதமாக மணல் எடுத்துச் செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலை துறைமுகத்திலிருந்து எடுத்துச் செல்ல லாம் என்றும் ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டு உள்ளது.

ஐகோர்ட்டின் இந்த உத்தரவு காரணமாக தமிழகத்தில் மணல் விற்பனை விலை விண்ணை தொடும் அளவுக்கு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.