மதுரை:
துரை எய்ம்ஸ் தலைவர் நாகராஜன் காலமானார்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தலைவராக நியமிக்கப்பட்ட நாகராஜன் காலமானார்.திடீர் மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. . கடந்த அக்டோபர் 22ஆம் தேதி எய்ம்ஸ் மருத்துவமனை தலைவராக நியமிக்கப்பட்ட அவர் மூத்த நரம்பியல் சிசிக்சை நிபுணராக இருந்தார். எம்ஜிஆர் மருத்துவ பல்கலைகழகத்தின் பேராசிரியராகவும் இருந்துள்ளார். இவருடைய மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.