சென்னை: நடிகை கூறிய பாலியல் வழக்கில் , தலைமறைவான முன்னாள் அமைச்சர் மணிகண்டன், முன் ஜாமீன் கோரி  தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அம்மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டு உள்ளது.

நடிகை சாந்தினி என்பவர் முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் மீது திருமணம் செய்வதாக ஏமாற்றி தன்னுடன் குடும்பம் நடத்திய புகார் கொடுத்திருந்தார். இந்த புகார்  தொடர்பாக காவல்துறையினர் 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  இதையடுத்து தலைமறைவான மணிகண்டன், முன் ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவில், “மருத்துவ உதவிக்காக தான் தந்த ரூபாய் 5 லட்சத்தைத் திருப்பிக் கேட்டால் தன்னை மிரட்டுவதாகவும், பணம் பறிக்கும் நோக்கில் தன் மீது புகார் அளித்ததாகவும், மலேசியாவில் இதுபோல் நடிகை மோசடி செய்ததாகவும்” குற்றம்சாட்டியிருந்தார்.

இந்த மனு மீது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அப்துல் குத்தூஸ் விசாரணை நடத்தி வந்தார். இதையடுத்து, முன்னாள் அமைச்சர் மீதான குற்றச்சாட்டில் மூகாந்திரம் உள்ளது என கூறி, அவரது முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.