தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் சிம்பு.

வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு, சில்லுன்னு ஒரு காதல் கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல உள்ளிட்ட படங்களில் வரிசையில் இருக்கிறது.

இந்நிலையில் வரும் பிப்ரவரி 3-ஆம் தேதி சிம்பு தனது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார். இதுபற்றி தற்போது ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

“என்‌ உயிரினும்‌ மேலான ரசிகர்களுக்கு… வணக்கங்கள்‌, எத்தனை தடைகளை நான்‌ கடந்து வந்தாலும்‌, என்னுடன்‌ என்றுமே நின்றிருக்கிறது உங்கள்‌ பேரன்பு. அதுதான்‌ நான்‌ அடுக்தடுத்து படங்கள்‌ தருவதற்கும்‌, உடல்‌ எடையைக்‌ குறைத்து உத்வேகமானதற்கும்‌ மிக முக்கிய காரணம்‌. கொரோனா காலகட்டத்தில் வெகு விரைவாக முடிக்கப்பட்ட “ஈஸ்வரன்” படத்திற்கு பெரிய வரவேற்பைக் கொடுத்தீர்கள். வெற்றி பெறச்‌ செய்தீர்கள்‌. உங்களை நான்‌ ரசிகர்கள்‌ என்று சொல்வதை விட எனது குடும்பம்‌ என்று சொல்வதுதான்‌ சரியாக இருக்கும்‌. உங்கள்‌ அன்பிற்கு நிறைய நன்றிக்‌ கடன்பட்டுள்ளேன்.

எனது பிறந்தநாளன்று நான் உங்களோடுதான் இருக்க வேண்டும். ஆனால் சில முன் தீர்மானங்களால் ஊரில் இல்லை. வெளியூர்‌ செல்கிறேன்‌. என்‌ குடும்பத்தினர்‌ வந்து வீட்டு முன்‌ காத்திருப்பதை நான் ‌ விரும்பவில்லை. அதனால்‌ நண்பர்கள்‌ யாரும்‌ என்‌ பிறந்தநாளன்று சந்திக்க வந்து ஏமாற்றமடைய வேண்டாம்‌. உங்களை நேரடியாக சந்திக்கும்‌ நிகழ்வை விரைவில்‌ ஒருங்கிணைப்பேன்‌. நாம்‌ சந்திப்போம்‌. ஒரு சிறு மகிழ்ச்சியாக என்‌ பிறத்தநாளன்று “மாநாடு” டீசர்‌ வெளியாகும்‌. மகிழுங்கள். நிச்சயம் இனி நமது ஆண்டாக வெற்றிகரமான ஆண்டாக இருக்கும்.அனைவருக்கும் அன்பும்.. நன்றியும்” என்று கூறியுள்ளார்.