சென்னை: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கவலை தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கடந்த சில மாதத்திற்கு முன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.  இந்த நிலையில், இன்று மீண்டும் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 3 மாதங்களுக்குள் 2வது முறையாக தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அவர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து டிவிட் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது கவலையளிக்கிறது. அவர் விரைவில் குணமடைந்து, அவர் செயல்படுவதை பார்ப்பேன் என நம்புகிறேன்.’ என தெரிவித்துள்ளார்.