நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பல மாநிலங்களிலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது.
ஊரடங்கு சமயத்தில் பல திரைப்பட தொழிலாளர்களும் வருமானமின்றி நலிவடைந்தனர் தினசரி வருமானத்திற்காக திரைப்பட தொழிலில் ஈடுபட்டு வரும் பல தொழிலாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பலரும் ஃபெப்சி சங்கத்திற்கு நிதி உதவி அளித்து வந்தனர்.
அந்த வகையில் தற்போது திரைப்படத் தொழிலாளர்களின் நலனுக்காகவும் அவர்களுக்கான நிவாரண பணிகளை செய்வதற்காகவும் ஃபெப்சி நலச் சங்கத்திற்கு லைகா நிறுவனம் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் அல்லிராஜா சார்பில் ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை லைகா நிறுவனத்தின் CEO திரு.திருக்குமரன் அவர்கள் இயக்குனர் ஆர்.கே.செல்வமணி அவர்களை நேரில் சந்தித்து வழங்கியுள்ளார்.
#LycaProductions donated Rs. 1 Cr to #FEFSI Trust. It's CEO Mr. #Thirukumaran handed over the cheque to #FEFSI President RK. Selvamani who later thanked Mr. Subaskaran for his contribution. @LycaProductions @idiamondbabu@V4umedia_ pic.twitter.com/pyzZm79Fcz
— RIAZ K AHMED (@RIAZtheboss) June 21, 2021