திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில், சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்தனர்.

திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இளைஞர்கள் இருவர் இருசக்கர வாகனத்தில் பயணித்துள்ளனர். அதே சாலையில், லாரி ஒன்று வந்துக்கொண்டிருந்தது. லாரி கட்டுப்பாட்டை இழந்த நிலையில், சாலையில் எதிரே வந்துக்கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற அரவிந்தன் மற்றும் கவுதம் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிந்துள்ள காவல்துறையினர், இரு இளைஞர்களின் உடல்களையும் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.