சென்னை:

ரடங்கு உத்தரவின் போது புத்தகங்களை படிக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு, திமுக தலைவர் முக ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளார்.

இந்தியாவில் வேகமாகப் பரவிவரும் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 14-ம் தேதியுடன் ஊரடங்கு உத்தரவு முடிவடைய உள்ளது.

இன்று இரவு 9 மணிக்கு வீட்டில் உள்ள மின் விளக்குகளை 9 நிமிடங்கள் அணைத்து விட்டு, அகல்விளக்கு ஏற்றவும், மாடியில் இருந்து மொபைல் டார்ச்-சை ஒளிரச் செய்யவும் என பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், புத்தகங்களை படிக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு, திமுக தலைவர் முக ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளார்.