நீலகிரி:
தகையில் நாளை நடைபெறும் 125வது மலர் கண்காட்சியை முன்னிட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

நீலகிரி மாவட்டத்தில் கோடை விழாவையொட்டி, 125-வது மலர் கண்காட்சி உதகை அரசு தாவரவியல் பூங்காவில் நாளை முதல் 23-ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது.

நீலகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் கோடை விழா நடைபெறும். இந்த விழாவின் முக்கிய நிகழ்வுகளாக காய்கறி கண்காட்சி, வாசனை திரவிய கண்காட்சி, ரோஜா கண்காட்சி, மலர் கண்காட்சி, பழக் கண்காட்சி என விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் மலர் கண்காட்சியைக் காண உலகம் முழுவதிலும் இருந்து பல லட்சக் கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிகின்றனர்.

இந்நிலையில், உதகையில் நாளை நடைபெறும் 125வது மலர் கண்காட்சியை முன்னிட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. விடுமுறையை ஈடு செய்யும் விதமாக ஜூன் 3ம் தேதி பணி நாளாக அறிவித்து ஆட்சியர் அம்ரித் உத்தரவிட்டுள்ளார்.