டில்லி,

மிழக்ததில் உள்ளாட்சி தேர்தல் நடத்த உத்தரவிட கோரிய வழக்கில், தமிழக அரசு, மாநில தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே ஆகஸ்டு 16ந்தேதி நடைபெற்ற விசாரணையின்போது, தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த 6 மாதம் ஆகும் என மாநில தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்தபோது, தமிழக அரசு சார்பாக வாதாடிய வழக்கறிஞரிடம், தமிழக ஆட்சியில் உள்ள குழப்பமே உள்ளாட்சி தேர்தல் தாமதத்திற்கு காரணமா கடுமையான கேள்விகளை எழுப்பியிருந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு மற்றும் மாநில தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பவும், அதற்கு 6 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.