சென்னை:
சுதந்திர தினத்தை விடுமுறையை முன்னிட்டு நேற்று ஒரே நாளில் ரூ.274 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து டாஸ்மாக் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மண்டலத்தில் உள்ள மது கடைகளில், 56 கோடி ரூபாய்க்கும், திருச்சி மண்டலத்தில், 53.50 கோடி ரூபாய்க்கும், சேலத்தில், 54 கோடி ரூபாய்க்கும், மதுரையில், 58.26 கோடி ரூபாய்க்கும், கோவை மண்டலம், 52.29 கோடி ரூபாய்க்கு மதுபான வகைகள் விற்பனையாகி உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.