சென்னை

மிழகத்தின் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் லேசான மழை பெய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் சில இடங்களில் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று (வியாழக்கிழமை) முதல் 31-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை மிதமான மழை பெய்யக்கூடும் என்று  வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

குறிப்பாக 31 ஆம் தேதி தென்மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தற்போது தமிழகத்தின் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதாவது கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், நெல்லை, கன்னியாகுமரி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.