ரஷ்யா உடன் கிரிமியா-வை இணைக்கும் பாலத்தை உக்ரைன் படைகள் தகர்த்ததை அடுத்து உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளது.

கிரிமியா ரஷ்யா இடையிலான பாலத்தை தகர்த்தது தீவிரவாத தாக்குதல் என்று அறிவித்துள்ளது ரஷ்யா.

இதனை தொடர்ந்து உக்ரைன் தலைநகர் கிவ் உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளதை அடுத்து மேற்கு உலக நாடுகள் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.